• May 18 2024

ஜுவாவை மூர்த்தியிடம் போட்டுக் கொடுத்த கண்ணன்- மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- திட்டி தீர்த்த கதிர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது மீனா, ஜுவா கண்ணன் ஆகியோர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது கார் மோட்டோர் சைக்கிளில் பயணித்த ஒருவருடன் மோதியது. இதனால் காரில் சிறு கீறல் விழுந்து விட்டது. இதனை பார்த்த கண்ணன் ஜுவா வேண்டுமென்றே செய்தது போல மூர்த்தியிடம் போய் சொல்கின்றார்.


இதனால் மூர்த்தியும் கடுப்பாகி திட்டுகின்றார். பின்னர் கதிரின் பணத்தில் தான் கார் வாங்கிய விடயத்தையும் கூற ஜுவாவும் மீனாவும் அதிர்ச்சியடைகின்றனர்.பின்னர் கதிர் கண்ணனைத் திட்டுகின்றார். உனக்கு சபைக்கு முன்னாடி எப்படி பேசனும் என்று தெரியாதா? கார் எல்லோருக்கும் தான் சொந்தம் என்று கூறி பேசுகின்றார்.

தொடர்ந்து விடிந்ததும் கதிரிடம் போய் ஜுவா மன்னிப்புக் கேட்க கதிர் பேசுகின்றார். இதென்ன அண்ணா எல்லோருக்கும் தான் கார் சொந்தம் என்று கூறி சமாதானம் செய்கின்றார்.தொடர்ந்து தனம், முல்லை ,ஐஸ்வர்யா ஆகியோர் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது மீனா ஒரு மாதிரியாக இருக்கிறார்.


பின்னர் மீனாவின் அப்பா வந்து மீனாவிடம் பேசிவிட்டு தன்னுடைய காரைக் கொடுத்து விட்டுச் செல்கின்றார்.மீனா வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் அவர் கொடுத்து விட்டுச் செல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றனது.

Advertisement

Advertisement