• Mar 21 2025

பெண்கள் திருமணத்திற்குப் பின் நடிக்கக் கூடாதா...? – ஜோதிகா அதிரடிக் கருத்து!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஜோதிகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் திரைத்துறையை விட்டு விலகிய பின்னணி பற்றிய உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். அவரது முடிவுகள் குறித்து ரசிகர்களிடம் இருந்து வந்த கருத்துக்கள் பற்றியும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, திருமணத்திற்கு பின் நான் நடிக்காமல் போனதற்கு எனது குடும்பத்தினர் காரணம் இல்லை என்றார். மேலும் சில ரசிகர்கள் இது குறித்து தவறான எண்ணத்தைப் புரிந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


நடிகையாக மீண்டும் வருகை செய்த ஜோதிகா தற்போது பிரமாண்டமான படங்களில் நடித்து வருகின்றார். குடும்பத்திற்காக சில வருடங்கள் ஓய்வு எடுத்த பின்னர் தற்போது திரைப்பட உலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஜோதிகா மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பியதும் தமிழ் சினிமாவில் பெண்கள் மையமான கதைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement