• Apr 26 2024

முதலை வாயிலேயே கைவிட்டது போல ஆகி விட்டது தப்பு பண்ணிட்டேன் -ஃபேக்கரி டாஸ்கில் புலம்பிய தனலட்சுமி..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்பொழுது  வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில்   ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

பொருட்கள் மணிகண்டன் கையில் வந்துவிடுகின்றன. இதில், தனலட்சுமி மிகவும் ஆவேசமாக தன்னை தள்ளிவிட்டு தன் கையிலிருந்து பிடுங்கி மணிகண்டன் பொருட்கள் எடுத்துக் கொண்டதாக கூறுகிறார். இந்த பேச்சில் தனலட்சுமி மரியாதைக் குறைவாகப் பேசுவதாய் சொன்ன மணிகண்டன்,    “உன் வயது என்ன? என்னை எப்படி ‘டா’ என்று சொல்கிறாய்?” என்று இன்னும் கொதிக்கிறார். பின்ஒரு மாதிரியாக இருவரின் சண்டையும் ஓய்ந்தது.


இந்நிலையில் இப்போது தனலட்சுமியின் அணியில் உள்ள அசீம், கன்வேயரில் அட்டை பாக்ஸ் வரும்போது, கையை உள்ளே விட்டு எடுப்பதற்கு அமுதவாணன் உதவினார். அப்போது கன்வேயரின் மீது படுத்து அசீம் கைகளை உள்ளே விட்டும் எடுக்கவில்லை. இதை அடுத்து முந்தைய நாள் ராம், தற்போது அசீம் என இருவரையும் தங்கள் அணியில் வைத்திருந்தது தவறு என தனலட்சுமி, அமுதவாணனிடம் பேசுகிறார், 

முன்னதாக, தான் கையை உள்ளே விட்டு முயற்சி செய்தும், அட்டையை எடுக்க முடியவில்லை என தனலட்சுமியிடம் அசீம் விளக்கம் அளித்தார். ஆனால் தனலட்சுமியோ, ‘இங்கு கன்வேயரின் மீது படுப்பது முக்கியம் இல்லை’ என கூறினார்.


அதன் பின்பு குயின்ஸியிடமும் இதுபற்றி பேசிய தனலட்சுமி, “அசீம் தனது அணிக்காக முந்திக்கொண்டு அட்டையை எடுப்பதில், மும்முரம் காட்டவில்லை, அவருக்கு அதற்கான ஆர்வம் இல்லை” என்று தான் உணர்வதாக தனலட்சுமி வருத்தமாக பேசுகிறார். குறிப்பாக, “முதலை வாயிலேயே கொண்டு சென்று கையை விட்ட மாதிரி ஆகிவிட்டது” என கூறி, தான் தவறு செய்துவிட்டதாக சொல்கிறார். ஃபேக்டரி டாஸ்கை பொருத்தவரை தனலட்சுமி, மணிகண்டன் , அமுதவாணன், மகேஸ்வரி இதுவரை பெரிதாக பேசப்பட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement