• Apr 26 2024

கர்ப்பிணியாக இருந்த நடிகை சௌந்தர்யா.. மரணத்திற்குக் காரணம் இதுதானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் குறிப்பாக 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவரது நடிப்பினைத் தாண்டி அழகிற்கேன்றே பல ரசிகர்கள் கூட்டம் உண்டு.


அந்தவகையில் இவர் தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா' போன்ற பல ஹிட் படங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார். தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். 


இவ்வாறு சினிமாவில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சௌந்தர்யா 2003 -ஆம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். சினிமாவைத் தாண்டி சௌந்தர்யா, அரசியலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


இந்நிலையில் 2004 -ஆம் ஆண்டு சௌந்தர்யா தனி விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் சௌந்தர்யா, அவரின் சகோதரர், நண்பர்கள் எனப் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆனது திரையுலகில் பலரையும்  பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக  இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது வெளிவந்திருந்தது. அதாவது விமானத்தை 100 அடிக்கு மேல் பறக்க ஆரம்பிக்கும் போது வழியில் பல பறவைகள் முட்டுக்கட்டையாக பறந்து இருந்திருக்கிறது. 


அந்த நேரத்தில் விமானி பறவைகளை திசைதிருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது இந்த விபத்து நடக்கும் போது சௌந்தர்யா கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த விபத்து நிகழ்ந்து பல வருடங்கள் ஆனாலும் இன்றுவரை ரசிகர்களை இவரது நினைவு கவலையில் ஆழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement