• Apr 19 2024

சுந்தரி சீரியலை இயக்குவது இந்த சீரியல் நடிகர் தானா?- அடடே இவர் காலா பட நடிகை ஈஸ்வரியின் கணவரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஈஸ்வரி ராவ் தமிழில், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கவிதை பாடும் அலைகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, அறிமுகமானார். கன்னடம் என்று பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் இரண்டாம் ஹீரோயினாக கூட நடித்திருந்தார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் தனுஷின் அக்காவாக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தனுஷுக்கு அக்காவாக நடித்து பின்னர் ரஜினிக்கே மனைவியாக நடித்தவர் . எல்.ராஜா ஒரு இயக்குநர் என்பது பலரும் அறியாத ஓன்று தான். இவர் நடிகர் அர்ஜுன் நடித்த சங்கர் குரு, சொந்தக்காரன், தரைமேல் ஆணை உள்ளிட்ட படங்களையும், ரகுவரன் நடித்த குற்றவாளி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.


மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டும் இயக்குநராக இல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். ரட்சிதா மற்றும் அவரது கணவர் நடித்த “பிரிவோம் சிந்திப்போம்” என்ற கணவர் சன் டிவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள், தாமரை போன்ற பல சீரியல்களை இவர் இயக்கி இருக்கிறார். தற்போது நடிகை ஈஸ்வரியின் கணவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “சுந்தரி” என்ற சீரியலை இயக்கி வருகிறார்.


இந்நிலையில் நடிகை ஈஸ்வரி மற்றும் இயக்குநர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார் .இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வெளியான “கொன்றால் பாவம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார் கதாபாத்தியாக நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement