• May 20 2024

மறைந்த நடிகை சித்ராவுக்கும் நடிகர் திலீபனுக்கும் இடையில் இப்டியொரு உறவிருக்கா?- ஒரு போட்டோ கூட வெளியிடாததற்கு இது தான் காரணமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் சித்ரா.பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.

இருப்பினும் தன்னுடைய காதல் கணவருடன் ஏற்பட்ட வாகடகுவாதம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் இன்றும் மர்மமாகவே இருக்கின்றது. இப்படியான நிலையில் பிரபல நடிகர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதாவது தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால், பள்ளிக்கூடம் போகலாமே, எவன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் திலீபன் புகழேந்தி.இவர் சித்ராவின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கின்றார்.சித்ராவிற்கும் திலீபன் புகழேந்திக்கும் ஏழு வருட நட்பாம். இருவரும் சேர்ந்து நிறைய புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்களாம். அந்த புகைப்படங்கள் எல்லாம் திலீபனிடம் இருக்கிறதாம் .


ஆனால் அதை சமூக வலைதளங்களில் ஒரு தடவை கூட திலீபன் வெளியிடவில்லை. அதற்கு காரணம் சித்ராவை வைத்து நான் புகழ் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என கூறி இருக்கிறார்.ஆனால் அவர் ஒரு பெண்ணை கிட்டத்தட்ட பத்து வருடமாக காதலித்து இருக்கிறாராம். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்களாம் ஆனால் திலீபன் அந்தப் பெண்ணை காதலிக்கும் போதே மற்ற பெண்களுடனும் டேட்டிங் எல்லாம் செல்வாராம். அது தெரிந்து அந்தப் பெண் திலீபனை விட்டு பிரிந்து விட்டாராம். 

ஆனால் இதே தவறை நிறைய தடவை செய்திருக்கிறாராம் திலீபன். அந்த சமயங்களில் எல்லாம் அந்தப் பெண் இவரை மன்னித்து மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.அதனால் இந்த முறையும் மன்னிப்பு கேட்க நான் தயாராக இல்லை என்றும் அந்தப் பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்றும் கூறினார் திலீபன். மேலும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பைனல் வரைக்கும் சென்று ஒரு போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாராம் திலீபன். ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக அவரால் பிக் பாஸில் கலந்து கொள்ள முடியவில்லையாம்.


ஆனால் பிக் பாஸ் ஆறாவது சீசன் முடிந்த நிலையில் இந்த வருடம் தொடங்கும் ஏழாவது சீசனில் கண்டிப்பாக நான் உள்ளே வருவேன் என்றும் தொடர்ந்து ப்ரோமோக்களில் நான் இருப்பேன் என்றும் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு பிக் பாஸிற்காக நான் நிறைய பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றும் பிக் பாஸில் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்பதை பார்க்கப் போகிறீர்கள் என்றும் மிகவும் கெத்தாக கூறினார் .  மேலும் இந்த திலீபன் புகழேந்தி தமிழ் சினிமாவில் மிகவும் கொடி கட்டி பறந்த கவிஞரான புலமை பித்தனின் பேரனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement