• May 09 2024

கண்ணான கண்ணே நீ கலங்காதடி- திருமண நாளில் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்- வெளியாகிய வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 


இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.


இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் புல்லாங்குழல் வாசிக்கும் நவீன் மூலம் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றார். அதாவது நவீன் புல்லாங்குழலில் கண்ணாண கண்ணே கலங்காதடி என்னும் பாடலை வாசிக்க நயன்தாரா ஆச்சரியப்பட்டதுடன் விக்னேஷ் சிவனை கட்டிப்பிடிக்கின்றார். இது குறித்த வீடியோவை தற்பொழுது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement