• Apr 26 2024

நான் நினைத்தால் 10,000 காகங்களை கூட வரவைப்பேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய பிரபல காமெடி நடிகர்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சில படங்களில் தம்முடைய இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் சிலர் இயக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு நடிகர்களுக்கும்  நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, இசையமைப்பது படம் தயாரிப்பது போல திறமைகள் இருக்கும்.ஆனால் இதெல்லாம் இல்லாம வித்தியாசமான திறமைகள் உள்ள மனிதர்களும் உள்ளனர்.

அந்த வகையில் சில படங்களில் காமெடியனாக நடித்தவர் தான் நடிகர் காக்கா கோபால்.இவர் வெகு காலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்சமயம் பேட்டியில் பேசிய இவர் வித்தியாசமான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார்.


இவர் ஒரு படத்தில் விவேக்  காக்கா பிரியாணி உண்ட பிறகு அங்கு வரும் மனிதர் காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா சத்தம் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என கேட்டிருந்தார். எனவே இப்படத்தைத் தொடர்ந்து தான் இவருக்கு காக்கா கோபால் என்கிற பெயர் வந்தது என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் அதற்கு அவரது திறமையே காரணமாக இருந்துள்ளது. அவர் காகம் போன்ற குரலில் கத்தினால் நிறைய காகங்கள் அங்கு வருமாம். இதுகுறித்து கூறும் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு காகம் வர வேண்டும் என இயக்குநர்கள் நினைத்தால் என்னை அழைப்பார்கள். நான் காகம் போல கத்தி 10,000 காகங்களை கூட வரவழைப்பேன். அவை ரவுண்டடிக்க வேண்டும் என்றால் அதையும் செய்வேன்.


மேலும் ஆடு, மாடு, எருமை போன்ற மிருகங்களிடம் கூட எனக்கு பேச தெரியும் என ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் காக்கா கோபால். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியமடையவைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement