• Sep 21 2024

திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்தேன்..!! நந்தன் படம் பற்றி சூரி ஓபன் டாக்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சசிகுமார். இவர் நடித்த முதலாவது படமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரையில் தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருடைய படங்கள் என்றாலே குடும்பப் பாங்கான படங்கள் ஆகவும் வித்தியாசமான கதை அம்சங்களில் நட்பு, துரோகம், அரசியல் என்பவற்றை எடுத்துக் கூறும் விதத்திலும் காணப்படும். சசிகுமாரின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் நந்தன். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்துள்ளார் சசிகுமார்.

நந்தன் படத்தை இயக்குனர் இரா. சரவணன் உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.


நந்தன் திரைப்படம் வெளியான போது இதனைப் பார்த்த சிவகார்த்திகேயன் மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். அதில் சசிகுமாரின் நடிப்பை பார்த்து வியந்ததாகவும், முதல் காட்சியிலேயே இரா. சரவணன் படத்தை செதுக்கி இருப்பதாகவும் கண்கலங்கி, கைதட்டல்களுடன் இந்த படத்தை பார்த்து முடித்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சூரி நந்தன் படத்தை பற்றி விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்தது போல் உள்ளது. ரொம்ப சூப்பரா இருக்கு. நிறைய இடங்களில் உங்களை அறியாமலையை கைதட்டுவீர்கள், அழுவீர்கள், விசில் அடிப்பீர்கள். ஒரு சிறப்பான படம் பார்த்த அனுபவத்தை தந்த நந்தன் படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement