• Sep 19 2024

நான் சூர்யாவிடம் ரொம்ப மன்னிப்பு கேட்கிறேன்- புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி செய்த காரியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கார்கி. இப்படமானது வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் நீதிப் போராட்ட கதையாக இந்த கார்கி உருவாகி உள்ளது

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் சார்பில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு மூன்று மொழிகளிலுமே சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார். செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் தனது அப்பாவை பொய் வழக்கில் போலீஸ் அழைத்துச் செல்ல தனி ஒரு மனுஷியாக எப்படி போராடி மீட்கிறார் என்பது தான் கார்கி படத்தின் கதை என்பது ட்ரெய்லரை பார்த்தாலே புரிகிறது.

இந்த நிலையில் கார்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி தனது பேச்சை முடித்து விட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து, "நான் ரொம்ப மன்னிப்பு கேட்கிறேன்.. சூர்யா பற்றி பேசாமல் போய்விட்டேன். இந்த படத்திற்கு சூர்யா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார்.

ஒரு நாள் ஒரு சின்ன பிரஸ்மீட் வாங்கன்னு ஒரு இடத்துக்கு என்னை கூட்டிட்டுப் போனாங்க, ஆனால், அது சூர்யாவின் வீடு என்று எனக்கு தெரியவில்லை, ஜோதிகா பின்னால் இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அவங்களை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். அவங்களுக்கு ஒழுங்கா நன்றி கூட நான் சொல்லல.. ரொம்பவே ஷாக் ஆகி நின்னேன்.

போட்டோக்களில் கூட சிரிச்சேனான்னு கூட தெரியல, ஜெய்பீம், சூரரைப் போற்று போன்ற படங்களில் சூர்யா நடித்து வரும் நிலையில், கார்கி போன்ற வித்தியாசமான படங்களுக்கு அவர் அளித்து வரும் பங்களிப்பு மிகப்பெரியது என சாய் பல்லவி புகழ்ந்து பேசியது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement