• May 21 2024

மாரிமுத்து இறந்தது எப்படி..? அதிர்ச்சியில் 'எதிர்நீச்சல்' இயக்குநர் திருச்செல்வம்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


எதிர்நீச்சல் சீரியல்  இவ்வளவு விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதற்கு சீரியல் நடிகர்களையும் தாண்டி அதனை இயக்கும் இயக்குனரும் பெரும்பாடுபடுகின்றார். அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் மாரிமுத்துவின் இறப்பு குறித்து இரங்கல் செய்தியை  வெளியிட்டுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "இது எங்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி, காலையில் ஷூட்டிங் ரெடிபண்ணிக்கொண்டு இருக்கும் போது டப்பிங் முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக கூறியிருந்தார். இவரின் இறப்பு யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்" என்றார்.

மேலும் "உடல்நிலையில் சரியில்லை என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் திடீர் என்று அவரின் இறப்பு நிகழ்ந்தது எதிர்பார்க்காததாக இருக்கிறது. மிக பெரிய இழப்பு எங்களைவிட ,பார்வையாளர்களை விட அவரின் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பு" என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் திருச்செல்வம்.

Advertisement

Advertisement