தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ரசிகர்களின் மனதில் இமயம் போல உயர்ந்திருக்கிறார்கள். அவர்களின் புகழுக்காக சிலர் கோயில்கள், சிலைகள் என்பவற்றைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது ஒரு புதுவிதமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுஎன்னவென்றால், நடிகை த்ரிஷா பெயரில் ஒரு 'ஊரே' இருக்கின்றது என்பது தான்.
ஒரு த்ரிஷா ரசிகர் கண்டுபிடித்த இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த ஊரின் பெயர் ‘Vijayak Trisha’. இது ஒரு சினிமா விளம்பரம் அல்ல. தற்பொழுது இந்தத் தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த 'Vijayak Trisha’ எனும் ஊர், லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் உள்ளது. அதாவது, உலகின் உயரமான போர்ப் பகுதி எனப்படும் சியாச்சின் பேஸ் கேம்ப் செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊரைப் பார்த்தவுடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதுதான் தற்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்திய செய்தியாக மாறியுள்ளது.
Listen News!