• Sep 19 2024

சித்ராவை கொலை செய்து விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் ஹேமந்த்- புகைப்படத்துடன் நிரூபித்த ரேகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் ஆரம்பத்தில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சித்ரா. இவர் தனது காதல் கணவரான ஹேமந்துடன் ஹொட்டலில் தங்கி இருக்கும் போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவரது கணவரான ஹேமந்த் 8மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த இவர் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார். அவருடைய இறப்பிற்கு மாஜி எம். எல்.லே தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர் சொல்வது எல்லாம் பொய் என்று சித்ராவின் தோழியான நடிகை ரேகா நாயர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் சிறையில் இருந்து வந்த ஹேமந்த் தனக்கும் சித்திரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மாஜி அரசியல் தலைவர் தான் காரணம் என்று கமிஸ்னர் ஆபிஸ்ல புகார் கொடுத்திருக்கிறார். இதனால் அவர் பக்கம் உண்மை இருக்கு என்று நம்பிறீங்களா எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரேகா, ஹேமந்த் உண்மையானவர் இல்லை நேர்மையான ஆம்பிளையும் கிடையாது அயோக்கியதனம் செய்யிறது தான் அவன் வேலை. ஜெயில்ல இருந்து வந்ததுக்குப் பிறகு அவன் கிட்ட கடன் கொடுத்தவங்க கேட்கிறாங்க அதுக்கு மாபியா கும்பல் மிரட்டுது என்று சொல்லுவாங்களா.

இவனை யாரும் மிரட்டவில்லை. அவன் சொல்லுறது எல்லாம் உண்மை இல்லைங்க நல்ல புருஷனாக இருந்திருந்தா இவனை மிரட்டுறவங்கள பற்றி போலீஸ்ல சொல்லியிருக்கலாம் தானே. இவன் மட்டும் இந்த கொலைய பண்ணல இவனோட சேர்ந்து 4பேர் செய்தாங்க. கொலைய செய்திட்டு அவள் தொங்கிட்டா என்று சொன்னால் எப்பிடி.

இப்போ என்ன என்றால் அவன் மீண்டும் வந்திட்டான் அவனுக்கு சமூகத்தில நல்ல பேர் கிடைக்கனும் இப்போது இருக்கிற தி மு க கட்சி அவனை பார்த்துக் கொள்ளும் என்று சொல்லுறான். அவன் ஆரம்பத்தில இருந்து பொய் தான் சொல்லுறான். தண்டனை இல்லாம வெளியில வந்ததால நான் ரொம்ப நல்லவன் என்று பல்டி அடிக்கிறான் இது ஏன் என்றால் தனக்கு பாதுகாப்பு வேணும் என்றது தான்.

ஒன்று அவன் வாழ்றதுக்கு பணம் வேணும் சமூகத்தில தனக்கு மதிப்பு வேணும் இதுக்காகத் தான் இப்படி பண்றான். ஆரம்பத்தில இருந்து அவன் நல்லவன் கிடையாது. மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா அவன் வரட்டும் நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் அதுக்கப்பிறம் பேசுவோம்.

அவனுக்கு தன்னோட அழுக்கை களையனும் தான் வாழனும் என்பது தான். இவன் சொல்லுற கதை எல்லாம் கேட்டு இப்பவும் சில பொண்ணுங்க அவன நம்பிட்டு தான் இருக்கிறாங்க இதெல்லாம் எங்க முடிய போகுதோ தெரில. அத்தோடு இவன் நல்லவனாகவே இருக்கட்டும் . நீ உண்மைய சொல்லலாம் தானே அந்த நாளு பேரும் யாரு என்று எனக்கு தெரியும். இதுக்கு பின்னாடி பணம் கொடுக்கவும் அவன்கிட்ட ஆளு இருக்கு அவனை காப்பாத்தவும் ஆளு இருக்கு இந்த சமூகத்தில யாரு வேணும் என்டாலும் நம்பட்டும் நான் நம்பமாட்டேன்.

அவன் சும்மா தான் மாஜி எம் எல் லே என்று சொல்லுறான் சித்திரா வீட்டில் குட்டி பார் இருக்கு நிறைய ஆணுறை வைத்திருந்தாங்க கணவன் மனைவியாக இருக்கிறவங்க எதுக்காக இதை வச்சிருக்கணும். நல்லவனா இருந்திருந்தால் அவள் கொலை பற்றி ஆரம்பத்திலேயே இதை சொல்லியிருக்கலாம் தானே.

இவனுக்கு கொலை மிரட்டல் எல்லாம் வரலை அவன் இப்போ எதுக்கு வெளிய வந்திருக்கிறான் என்றால் கையில பீர் பாட்டில் வைச்சிருக்கணும் பொண்ணுங்க கூடவே இருக்கணும் அவ்வளவு தான் இதை தான் பண்ணிட்டு இருப்பான். இவனை ஆயுள் கைதியாக சிறையில அடைக்கனும் இல்லை என்றால் சமூகத்தில இருக்கிற இன்னும் பல பொண்ணுங்க சீரழிய வாய்ப்பு இருக்கு சித்ரா மீடியால இருந்ததால் எல்லாருக்கும் தெரிஞ்சிச்சு. ஆனால் வேற எந்த பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தால் யாருக்கும் இது தெரியாமல் போய்விடும் என்றும் கூறினார்.

அத்தோடு இந்த கொலை வழக்கில் இவனுக்கு 20 சதவீதம் தான் பங்கு இருக்கு மிச்ச 80 வீதம் இவனுக்கு தெரிஞ்ச நாலு பேர் தான் பண்ணினாங்க என்று அவனே அவனோட வாயால சொல்லனும். இவனால நான் நிறைய வீட்டுக்கு மாறி இருக்கிறேன். பிரண்ட்ஸ் எல்லாரும் என்கிட்ட பேசிறத குறைச்சிட்டாங்க. என்னை சந்திக்கனும் என்று சொல்லியிருக்கிறான். நான் கமிஸ்னர் ஆபிஸ்ல அவனை சந்திக்க ரெடியா இருக்கிறேன். சில கேள்விகளையும் அவன் கிட்ட கேட்கணும். ஆனால் அவன் என்னை சந்திக்கமாட்டான்.

அவன் மீடியா முன்னாடி வந்து சொல்லுறதுக்கு காரணம் தான் நல்லவன் என்று காண்பிக்கணும் என்றது மட்டும் தான் இதனால எனக்கு உயிர் ஆபத்து வந்தாலும் பரவாயில்ல ஒரு உண்மைக்காக போராடி உயிர் போவது சந்தோஷம் தான் அவன் என்ன வேணும் என்றாலும் பண்ணுவான். இவன் ஒரு நாள் தன்னை தானே அழிச்சுப்பான் இல்லை என்றால் யாராவது கொல்லுவாங்க. நான் அதிகாரிகளை நம்பாவிட்டாலும் கடவுளை நம்பிறேன் .

நான் அவளுக்காக பேசுவதற்கு காரணம் சினிமாவில் இருக்கிற பொண்ணுங்க இப்படியான ஆளுகளால பல பிரச்சினைகளை சந்திச்சிட்டு இருக்கிறாங்க சித்ரா நல்லவள் கிடையாது. அவள் இருந்திருந்தால் அதை அவ அனுபவிச்சிருப்பா.ஆனால் அதற்காக கொலை பண்ணியிருக்க கூடாது . சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது தயவு செய்து அவனை நம்பாதீங்க அவன் ஜெயில்ல இருந்து வந்ததுக்கு பிறகு பல பெண்களோட தொடர்பில் இருப்பதாக 11 பெண்களின் போட்டோவையும் காட்டினார். அத்தோடு அவனை யாரும் நம்பாதீங்க என்று உறுதியாகவும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement