• May 20 2024

ராதிகா முன்னாடியே பாக்கியாவைப் புகழ்ந்த கோபி- நக்கலடித்த ஈஸ்வரி- உண்மையை சொன்ன செல்வி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வரகயில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பழனி வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் பழனி கோபிக்கு உங்க மேல இன்னும் காதல் இருக்கு அதனால தான் நீங்க என்ன பண்றீங்க என பார்த்திட்டே இருக்காரு என சொல்ல பாக்கியா அதெல்லாம் இல்லைங்க, அவர் என்னை ஒரு நாள் கூட மதிச்சது இல்லை. என்னை முண்டம் தண்டம் எனறெல்லாம் திட்டிட்டே இருப்பாரு என்று கூறுகின்றார்.


இதனால் பழனி பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார். தொடர்ந்து அமிர்தா தன்னுடை முதல் கணவரின் அம்மாவிடம் போனில் பேசிட்டு இருக்கிறார். அந்த நேரம் எழில் வந்து என்ன ஆச்சு ஏன் அழுகிறீங்க என்று கேட்ட போது அமிர்தா அப்பா கிழே விழுந்திட்டாராம். அதான் அம்மா பேசினாங்க என்று சொல்கின்றார்.

எழில் சரி வாங்க அவங்களை போய் பார்த்திட்டு வரலாம் என்று அழைக்கின்றார். தொடர்ந்து கிச்சனில் பாக்கியா,ஈஸ்வரி, செல்வி மூன்று பேரும் கிச்சனில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் ராதிகா வர ஈஸ்வரி பாக்கியாவிடம் என்ன குழம்பு செய்கின்றாய் பாக்கியா இவ்வளவு வாசமா இருக்கு என்று கேட்கின்றார்.


அதற்கு பாக்கியா சிக்கன் குழும்பு அத்தை என்னு சொல்ல அது தான் இவ்வளவு வாசமா இருக்கு உன்னேதட கைப்பக்குவம் யாருக்கு வரும் என்ற சொல்ல ராதிகா கடுப்பாகின்றார். தொடர்ந்து கீழே வரும் கோபி ராதிகாதான் சிக்கன் குழம்பு வைத்திருக்கின்றார் என நினைதது பாராட்டுகின்றார் இதனால் ராதிகா கடுப்பாக செல்வி இத பாக்கியா வைத்த குழும்பு என்று சொல்கின்றார்.

இதனால் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் அங்கிருந்து தப்பித்து ஓட வழமை போல ராதிகா பாக்கியாவைத் திட்ட பாக்கியா ராதிகாவுக்கு அட்வைஸ்ட்  பண்ணுகின்றார். தொடர்ந்து மேலே செல்லும் ராதிகா கோபியைத் திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement