• May 20 2024

10 வருடங்களுக்கு பின் ஆண்ட்ரியா செய்த செயல்-வியந்து பார்க்கும் ரசிகர்கள்-இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு வி . ப்ரியாவின் இயக்கத்தில் வெளி வந்த கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் ஒரு நடிகை மட்டும் இன்றி பின்னனணி பாடகியும் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவர்

.இதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம்,ஆயிரத்தில் ஒருவன்,மங்காத்தா என பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விஸ்வரூபம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கமல்ஹாசனுடன் பூஜா ஹெக்டே மற்றும் ஆண்ட்ரியா எடுத்த புகைப்படத்தை, ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா அணிந்திருந்த இருந்த அதே சேலையை பத்து வருடத்திற்கு பின்பும் அதே சேலையை அணிந்துள்ளார் . பத்து வருடங்களுக்கு முன்பு அணிந்த அதே சேலை எண்று கேப்ஷனாக பதிவுசெய்துள்ளார் .

இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை குவித்து வருகின்றனர் . குறிப்பாக உங்கள் அழகு கொஞ்சமும் குறையவில்லை பத்து வருடங்களுக்கு முன்பு எவ்வாறு இருந்தாரோ அவ்வாறே இருக்கின்றார் என்றும் . தமது கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகின்றனர் .

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 என்ற படத்தில் நடித்து வருவதாகவும் அதனை தொடர்ந்து எட்டு தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் அவற்றை வரிசையாக வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement