• Sep 20 2024

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

அதாவது மாடலிங் துறையில் இருந்து பின்பு பெங்காலி மொழியில் நடிகையாக மாறியவர் தான் பிதிசா டி மஜூம்தார்.இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, கொல்கத்தா பகுதியிலுள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் தங்கி வந்த அபார்ட்மெண்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில், உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடம் சென்ற போலீசார், கதவை உடைத்து, பிதிஷாவின் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அவரின் உடலைக் கைப்பற்றியதோடு அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது வீட்டிற்குள் சோதனைகளையும் மேற்கொண்டனர்.அப்போது, அங்கிருந்து கடிதம் ஒன்றும் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, பிதிஷாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை கிடைத்த தகவலின் படி, பிதிஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்றும் போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

இவரின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.பிதிஷாவின் மறைவுக்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement