• Sep 20 2024

தேவயானியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்.. உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் தேவயானி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர்.

சுஷ்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரையுலகிற்காக தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொட்டாசினிங்கி என்னும் திரைப்படத்திலேயே கிளாமராக நடித்துள்ளாராம்.

அப்படத்திற்கு பிறகு சத்யராஜ்-பிரபு நடிப்பில் வெளியான சிவசக்தி திரைப்படத்தில் ஐட்டம் டான்சராக ஒரு பாடலில் குட்டையான உடையில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.

இவர் சன் டிவயின் பிரபலமான தொடரான கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றது அந்த தொடர்.

தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து வந்த நிலையில் அவரின் தாய் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இனியா,பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன. மேலும் பாட்டாளி திரைப்படத்தில் நடித்த தேவயானி மீது நடிகர் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவயானியை பெண் கேட்டு அவரின் தயாரிடம் சென்றுள்ளார். அப்போது சரத்குமாருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்துள்ளது.

ஏற்கனவே திருணம் ஆன உங்களுக்கு எப்படி என் பெண்ணை தருவது என்றும், அவள் சினிமாவில் சாதிக்க கூடியது இன்னும் நிறைய இருக்குன்னு சொல்லி தேவயானி தாய் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement