• May 05 2024

காதலில் விழுந்த தனுஷ் பட நடிகை: காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் ஏற்கனவே தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்யா.

மேலும் சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தனுஷூடன் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்து அசத்தி உள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படம்

படங்களில் நடித்து வந்த ரம்யா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். அத்தோடு கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார் நடிகை ரம்பா .தற்போது, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, விரைவில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் கிசிந்துள்ளது.

இந்நிலையில், நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த நபர், கரண் ஜோஷி என்பதும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகின்றது. இருவரும் காதலித்து வருவதாக கன்னட திரைத்துறையில் தகவல் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement