• May 20 2024

எல்லாமே பொய்.. திவ்யாவுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி குழந்தை இருந்தது...அர்னவ் கொடுத்த பரபரப்பு பேட்டி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2017ம் ஆண்டு கேளடி கண்மணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ். இவர்கள் இருவரும் சீரியல் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு 5வருடமாக ககாதலித்து வந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் பதிவு திருமணம் செய்துள்ளார்கள், இதனை ரகசியமாக வைத்த அவர்கள் கடந்த சில வாரத்திற்கு முன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை திவ்யா திடீரென மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டார். அதாவது கணவர் தன்னை அடித்ததில் தனக்கு வயிற்றில் அடிபட்டதாகவும், பின்னர் காலால் மிதித்ததில் மயக்கம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மயக்கம் தெளிந்து பார்க்கும் போது கணவர் அங்கே இல்லை. பின் வயிற்று வலி ஏற்படடு பிளீடிங் ஆக ஆரம்பித்ததால் மருத்துவமனை வந்துள்ளதாக கண்ணீர் மல்க செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.அத்தோடு தனது கணவர் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் சீரியல் நடிகர் அர்னவ் ஊடககங்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதாவது நான் என் மனைவியை அடிக்கவில்லை துன்புறுத்தவும் இல்லை.அவளுடைய நண்பர்களின் பேச்சை கேட்டு இப்படி செய்கிறாள்.கணவன் மனைவி என்றால் இப்படி சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் ஆனால் அதை வெளியில் கொண்டு வரக்கூடாது.

நான் அவளை அடிக்கவில்லை என்பதற்கு சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் உள்ளது.அவள் தான் எனக்கு நேற்று அடித்தாள்.எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது.அதை நான் காவல் துறையிடம் கொடுத்து இருக்கிறேன்.எங்கள் இருவரது ஆதாரத்துடனும் காவல்துறை உங்கள் உண்மையை கூறும்.

அத்தோடு இவர் தனக்கு முதல் திருமணம் நடந்ததை என்னிடம் கூறினார்.ஆனால் இவருக்கு 6வயதில் மகள் இருப்பதை கூறவில்லை.அவர்கள் இருவருக்கும் இந்த வருடம் ஜனவரி தான் விவாகரத்து கிடைத்துள்ளது.நான் டொக்கியுமன்ற்ஸ் கேட்கும் போது தான் தந்தார்.அப்போது தான் எனக்கு தெரியும்.அந்த ஆறுவயது குழந்தை யாருடையது என்று கேட்கும் போது தன்னுடைய அக்கா மகள் தான் என்று கூறுவார்.நானும் அந்த பிள்ளையை என்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வருவேன்.கடைசியில் தான் தெரிந்தது அந்த பிள்ளை அவருடைய குழந்தை தான் என்று.இருந்தும் நான் அவரை 5 வருடமாக காதலித்ததால் அவரை திருமணம் செய்து கொண்டேன்.

நான் தற்போது அவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை.எல்லா உண்மையும் காவல் துறை விசாரித்து உண்மையை கூறும்.அவர்களை தான் நான் நம்பி இருக்கின்றேன்.என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement