தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். இவர் ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, வரவு நல்ல உறவு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இசையமைத்து வந்துள்ளார். தற்போது சங்கர் கணேஷுக்கு வயது முதிர்ந்த காரணத்தினால் வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீரென ஐசியு வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளன. இது ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சங்கர் கணேசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளத அதன் பின் அவரை சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Listen News!