• Feb 01 2026

'சரிகமப லிட்டில் சாம்ஸ்' முதல் ஆளாக பைனலுக்கு முன்னேறிய போட்டியாளர் யார் தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் சரிகமபா லிட்டில் சாம்ஸ். 

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 


கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஓல்ட் ஈஸ் கோல்ட் ரவுண்ட் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


அதன்படி, முதல் ஆளாக பைனலுக்கு சென்றுள்ளார் சரிகமப லிட்டில் சாம்ஸ் போட்டியாளர் ஒருவர். 

தனது மெல்லிய குரலில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்த ரிக்ஷிதா தான் நேரடியாக பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த அறிவிப்பு குறித்த ஜீ தமிழின் பதிவு இதோ...

Advertisement

Advertisement