• Apr 26 2024

கை குழந்தையோடு திவ்யா ஸ்ரீதர்..மேடையில் செய்த செயல்..ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவுகள்..!

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும்  இவர் இதற்கு முன்பு ஏற்கனவே கேளடி கண்மணி என்ற சீரியல் நடித்திருக்கிறார். எனினும் இந்த சீரியலில் நடிக்கும் போது தான் நடிகர் அர்னாவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர்  திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை சோசியல் மீடியாவில் தெரிந்ததுதான். ஆனால் அர்னாவ் தற்போது செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இனி இருவரும் சேர்ந்து வாழ வழியே இல்லை என்று மாறி மாறி  தெரிவித்துக்கொண்டு உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  சில மாதங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் நடிப்பிற்கு சிறிது பிரேக் விட்டிருந்த திவ்யா ஸ்ரீதர் மீண்டும் சில மாதங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். தன்னுடைய குழந்தையை சூட்டிங் ஸ்பாட்க்கு தூக்கிக்கொண்டு சென்று நடிக்க தொடங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சன் குடும்ப விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திவ்யா ஸ்ரீதர் அவருடைய கைக்குழந்தையோடு வந்திருக்கிறார்.இவ்வாறுஇருக்கையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிகமானோர் திவ்யாவிற்கு வாழ்த்துக்கள்  தெரிவித்து வருகின்றனர். காதல் கைவிட்டு போனாலும் நம்முடைய உழைப்பை விட்டு விடக்கூடாது நம்முடைய திறமையால் நாம் நிமிர்ந்து நிற்க வேண்டுமே தவிர அழுதுகொண்டு அடங்கிப் போக கூடாது என்று திவ்யாவை பார்த்து ரசிகர்கள் பலரும் கற்றுக் கொண்டதாக கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement