• Apr 26 2024

பிரமாண்டமான வீட்டில் குடிபுகுந்தார் தனுஷ்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டாரின் முன்னாள் மருமகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து கொண்டார்கள். 


இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் 'வாத்தி' படம் வெளியாகி இருக்கின்றது. ரசிகர்கள் மத்தியில் அப்படத்திற்கு சிறந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் 'Sir' என்ற பெயரில் ரிலீஸ் ஆன இந்த படம் அங்கும் நல்ல வசூலை பெற்று வருகிறது.


இவ்வாறு ஒருபுறம் சினிமாவில் படு பிசியாக இருந்து வந்தாலும் மறுபுறம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புது வீட்டை கட்டி வந்தார். அதன் பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் தனுஷ் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். இந்த கிரஹப்பிரவேசத்தில் அவரது அப்பா அம்மா என குடும்பத்தினர் பலரும் கலந்து சிறப்பித்திருக்கின்றனர். 


இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்து வியந்த ரசிகர்கள் "மிகவும் பிரமாண்டமாக இந்த வீட்டை தனுஷ் கட்டி இருக்கிறார்" எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement