• Apr 27 2024

பிரபலங்கள் என நிகழ்ச்சிக்கு வரும் சிலரின் அநாகரீக நடவடிக்கைகளை புட்டுப்புட்டு வைக்கும் தொகுப்பாளினி ஜாக்குலின்!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்பபோவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜாக்லின். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'கானா காணும் காலங்கள்' மற்றும் 'ஆண்டாள் அழகர்' ஆகிய சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.


சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்து அசத்தி இருந்தார். அத்தோடு இவர் நடித்து வந்த 'தேன்மொழி' என்ற சீரியலும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.


இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்குலின் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்தார். அதில் பல விடயங்கள் குறித்தும் பகிர்ந்திருக்கின்றார். அதாவது "உங்களுக்கு எப்போதாவது அதிக கோபம் வந்து கொச்சை வார்த்தையால் திட்டியிருக்கிறீர்களா" என அவரிடம் கேட்கப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த ஜாக்குலின் "எனக்கு அப்படி கோபம் வந்தால் கத்திவிடுவேன், ஆனால் அதிகபட்சம் நான் மேடையில் ஏறிய பிறகு கோபம் என்பது வராது. ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கோபம் வந்திருக்கிறது" என்றார்.


மேலும் இதனை தொடர்ந்து மற்றுமோர் நிகழ்வை நினைவு கூறிய ஜாக்குலின் "படங்களில் நடிக்கும் பிரபலங்கள் என்று நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஒரு சிலர், தொகுப்பாளினி என்றால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் நடந்து கொள்கின்றனர். தொகுப்பாளினி என்று கிடையாது நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களின் தோளின் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற விஷியங்களை அவர்கள் செய்யும் போது அவை எனக்கு அசௌகரியமாக இருக்கும். அந்த நேரம் எனக்கு அவர்கள் மீது கடுமையான கோபம் வந்திருகிறது" எனக் கூறியிருக்கின்றார்.


அத்தோடு "பொதுவாக பெரிய நடிகர்களிடம் நாம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்று கேட்டால், அவர்கள் புகைப்படம் எடுக்கும் போது கூட கொஞ்சம் தள்ளி நமக்கு மரியாதை கொடுத்து நிற்பார்கள். அப்படி நடிகர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் போது, இவர்கள் “நான் தான் இங்கு பிரபலமானவர் என்று “என் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற அநாகரிகமான விஷயங்களை செய்யும் போது எனக்கு அப்படி எரிச்சலாக இருக்கும்" என்றார்.

மேலும் "இது போன்ற அசம்பாவிதங்கள் பலருக்கும் நடக்கிறது. உதாரணமாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களை தூக்கி சுற்றுவது போன்ற செயல்கள் செய்வதற்கு முன்னர் ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கலாம். உங்களுக்கு ஓகேவாக இருக்கிறதா? என்று. அதை விட்டுவிட்டு இப்படி அநாகரிகமாக என்னிடம் நடந்து கொண்டால் "தள்ளி போய்டு அடிச்சுருவன்" என்று கூறிவிடுவேன். அதனை நான் ஒரு முறை நிகழ்ச்சியின் போது கூறியும் இருக்கிறேன் என்று மிகவும் எதார்த்தமாக பதில் கூறினார் விஜய் டிவி ஜாக்குலின். 

ஜாக்குலின் இந்தப் பேச்சினைக் கேட்ட ரசிகர்கள் மத்தியில் தற்போது "இவர் யாரை குறிப்பிடுகிறார்" என்ற சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement