• Apr 26 2024

அபி வருணைக் கல்யாணம் பண்ணல என்ற உண்மையை அறிந்து கொண்ட சித்ரா- கண்மணியின் சூழ்ச்சியை அறிந்த விஜி- குழப்பத்தில் அபி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது அபி காரில் பயணித்துக் கொண்டிருந்த கார் இடையில் நின்று விட சாமியார் ஒருவர் அபியின் காரின் கதவைத் தட்ட அபி திறந்து பார்க்க சாமியார் வெற்றியின் கல்யாணத்தை நீ நிறுத்த வேண்டும் என்று சொல்ல துரோகி அவன் என்று அபி சொல்ல துரோகி யார் என்று தெரிந்தால் நீ தாங்க மாட்ட இந்த கல்யாணத்தை நீ நிறுத்தவில்லை என்றால் அந்த அம்மனே நிறுத்துவார் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து போகின்றார்.


அதனால் அபி அதிர்சியடைகின்றார். பின்னர் கல்யாணத்திற்காக அனைவரும் மண்டபத்திற்கு போகின்றனர். அப்போது வெற்றி தன்னால் கண்மணியை தன் மனைவியாக நினைத்துக் கூட பார்க்க முடில என்று தன்னுடைய சித்தப்பாவிடம் புலம்புகின்றார். மேலும் கண்மணியை மாப்பிள்ளை பார்க்க வந்தவர் கொடுத்த நம்பரை வைத்து இது யாருடைய நம்பர் என்று ஹக்கரை வைத்து கண்டு பிடிக்க முயற்சி செய்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க கண்மணியின் அப்பா கண்மணியை கல்யாணம் பண்ணினதுக்கு அப்பிறம் என்னை விட்டிட்டு உங்க வீட்டுக்கு போய்டமாட்டீங்க தானே என்று சொல்கின்றார். மேலும் கண்மணியை கட்டாயம் கல்யாணம் பண்ணுவீங்க தானே என சென்டிமென்டாக பேசுகின்றார். மேலும் திருமணம் நடக்கப் போவதை எண்ணி கண்மணி செம குஷியில் இருக்கின்றார்.


இது ஒரு புறம் இருக்க சித்ராவை வீதியில் கண்ட விஜி சித்ராவிடமம் பேசுகின்றார். அப்போது சித்தா அபி,வருணை கல்யாணம் பண்ணிட்டா தானே என சொல்ல கோபமடைந்த விஜி அபி கல்யாணம் பண்ணிட்டாளா. வருண் அவளுடைய சகோதரம் போல என்று சொல்ல சித்ரா அபியின் கல்யாண போட்டோவை கண்மணி காட்டினாளே என்று சொல்ல விஜி அபிக்கு தான் கல்யாணம் ஆகலையே எப்படி போட்டோவைக் காட்டுவா எனச் சொல்கின்றார். இதனால் சித்ரா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement