• Oct 23 2025

நல்ல விஷயத்துக்கு யாருமே சப்போர்ட் பண்ணல…சமூக சேவையால் மனம் உடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பாராட்டப்படுகிற திறமையான நடிகைகளில் ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷ். சமூக பொறுப்புணர்வு கொண்ட இவரது செயல்கள், பங்களிப்புகள் திரைப்பெயருக்குப் பின்னாலும் கவனிக்கப்படுகின்றன. சமீபத்தில், ஒரு சமூகநல நோக்கத்துக்காக பெரும்பான்மையுள்ள மக்களுக்கு உதவ முனைந்த அவர், தன் அனுபவத்தில் எதிர்கொண்ட ஆதங்கங்களையும், உணர்ச்சியையும் திறமையாக பகிர்ந்துள்ளார்.


சமூக சேவையின் ஒரு பகுதியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் 5000 பேருக்குப் பிரியாணி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் சில பெரியவர்களிடம் உதவி கேட்டார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக சப்போர்ட் தர யாரும் முன்வரவில்லை என்பது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என ஐஸ்வர்யா கூறியுள்ளார். 


அதாவது அண்மையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா, "ஒரு 5000 பேருக்கு பிரியாணி போடணும்னா எவ்வளவு செலவாகும் என்று தெரியும். ஒரு நல்ல விஷயத்துக்காக பெரிய ஆள் கிட்ட உதவி கேட்ட போது யாரும் சப்போர்ட் பண்ணல... ஒரு நடிகையாக எனக்கு நிறைய பேரை தெரியும். ஆனா ஸ்பான்சர் பிடிக்கும் போது தான் எவ்வளவு கஷ்டம் என்பது புரிஞ்சது. அதுதான் எனக்கு வருத்தமா இருந்தது." என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement