• May 20 2024

சென்னை, ஐதராபாத் தியேட்டர்களில் ரசிகர்களிடையே சிக்கிக் கொண்டு கண் கலங்கிய நடிகை சாய்பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய்பல்லவி நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் கார்கி. இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம் இந்த ஆண்டின் சிறப்பான படமாகக் காணப்படுகின்றது.

அனைவரின் பாராட்டுக்களையும் இந்தப் படம் பெற்று வந்தாலும் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் கதையில்லை என்று கூறி பழைய மாவை அரைப்பவர்களுக்கு இந்தப் படம் சிறப்பான கதையுடன் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் தன்னுடைய குடும்பமே தன்னுடைய வாழ்க்கை என வாழ்ந்துவரும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவம், அதிலிருந்து மீள அவர் செய்யும் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.

படத்தில் கார்கி கேரக்டரில் சாய் பல்லவி வாழ்ந்துள்ளார். அவரது அசத்தலான நடிப்பு கண்டிப்பாக இந்த ஆண்டில் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய தந்தையை மீட்க போராடும் மகளாக அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

திரையரங்குகளில் அதிகமான ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து வருகின்றனர். இதனிடையே படத்தை மேலும் பிரமோட் செய்யும் வகையில் சாய் பல்லவி ஐதராபாத் மற்றும் சென்னை திரையரங்குகளுக்கு திடீர் விசிட் செய்துள்ளார்.

திரையரங்குகளில் அவரை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளினர். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள அலைமோதினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த திரையரங்க நிர்வாகிகள் திணறியதையும் பார்க்க முடிந்தது. இதனால் சாய் பல்லவி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement