தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மதராசி' மற்றும் 'பராசக்தி' ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இவர் அடுத்ததாக 'குட் நைட்' பட இயக்குநருடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், அவர் தனது குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை பார்த்து நடிகர் அஜித்தை சந்தித்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வைரலாகின. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது தனது மனைவி மற்றும் மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து செம வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதோ அந்த வைரல் புகைப்படங்கள்.
Listen News!