• Sep 20 2024

சமந்தாவை கைகளில் தூக்கிய நடிகர் அக்ஷய் குமார்…என்ன நிகழ்ச்சியப்பா இது?..வைரலாகும் வீடியோ…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. திரையுலக அறிமுக காலத்தில் இருந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாராவும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். எனினும் இவர்கள் இருவரிற்குமிடையில் இடம்பெற்ற முரண்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர். திருமணத்தை தொடர்ந்தும் இவர் தனது கேரியரில் கவனம் செலுத்தும் நோக்கில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு எனக் கலக்கி வந்த இவர் தற்போது ஹிந்தியிலும் காலடி எடுத்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார் சமந்தா. அதாவது 'காபி வித் கரண்' என்ற ஷோவிலே கலந்து கொண்டிருக்கின்றார். அந்த ஷோவில் இவருடன் இணைந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் பங்கு பற்றியிருக்கின்றார். அந்த செட்டுக்குள் இவர்கள் இருவருமே ஒன்றாகத் தான் நுழைந்திருக்கின்றனர். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நடிகர் அக்ஷய் சமந்தாவைத் தனது கைகளில் தூக்கி வந்திருந்தார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

சமந்தா சிறிது காலமாக மாறி மாறி நாக சைதன்யா தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி வருகின்ற நிலையில் இப்படியான ஒரு ஷோவில் கலந்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது கரண் ஜோகர் சமந்தாவிடம் அவரது திருமண விவாகரத்து தொடர்பாகவும் கேட்டிருக்கின்றார். இதற்கு சமந்தா என்ன பதிலை கூறி இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் முழு எபிசோட்டுக்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement