• May 18 2024

"நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்'னு சொல்ல கொஞ்ச நாள் ஆகலாம்"; சீரியல் நடிகை தீபா

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தீபா. இவர் 'அன்பே சிவம்'. 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திரையுலக ஆரம்பத்தில் துணை நடிகையாக காலடி எடுத்து வைத்து படிப்படியாக முன்னேறி இன்று சீரியல் உலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவர் நடித்த சீரியல்கள் பல முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சீரியர்களில் நட்சத்திர நாயகியாக வலம் வருகின்ற இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் உண்டு. எனினும் கணவருடன் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் கணவரைப் பிரிந்து தற்போது தனது மகனுடன் மட்டுமே வசித்து வருகிறார். இவ்வாறாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்ற தீபாவிற்கு தற்போது சீரியல்கள் பலவற்றிற்குத் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றி இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கும் சாய் கணேஷ் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சாய் கணேஷ் தயாரிப்பு மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிக்க தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்தமாயினால் அன்றிலிருந்து இவருடன் நட்புடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் தீபா திடீரென சாய் கணேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றினை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதன் மேல் 'மை லவ்' எனப் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தீபாவும், சாய் கணேஷ் பாபுவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பலரும் பல விதமாகப் பேசி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது தீபாவும் சாய் கணேஷ் பாபுவும் திருமணம் செய்து கொள்ளவே இருந்ததாகவும், ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அவர்களுடைய வீடுகளில் ஆதரவு கொடுக்கவில்லை எனவும் அந்த விரக்தியால் தான் தீபா சாய் கணேஷ் பாபுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இனிமேல் அவருடன் 'திருமணம் நடக்காதோ' என்ற விரக்தியில் தீபா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தீபா ''அந்தப் போட்டோவை நான்தான் என்னுடைய சோஷியல் மீடியா பக்கத்துல பகிர்ந்தேன். ஆனா கல்யாணம் தொடர்பாக இப்போதைக்கு என்னால உறுதியான ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. 'ஆமா நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்'னு சொல்ல கொஞ்ச நாள் ஆகலாம். ஆனா 'இல்லை'னு சொல்ல மாட்டேன். இதுதவிர கொஞ்சம் சென்சிடிவாக அணுக வேண்டிய விஷயமாக இது இருக்கு. தவறாக ஏதாவது தகவல்கள் வெளியானால் நான் மட்டுமே பாதிக்கப்படுவேன்" எனக் கூறியிருக்கின்றாராம்.

மேலும் "அதுவும் போக இரண்டாவது திருமணம் என்பதால பெரியவங்க, சொந்தக்காரங்கன்னு எதிர்ப்பவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பாங்க இல்லையா? எல்லாத்தையும் சரி செஞ்சுட்டு எந்தவொரு தகவல் என்றாலும் முறைப்படி அறிவிக்கலாம்னு இருக்கோம்" எனக் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இது எந்த அளவிற்கு உண்மையான செய்தியாக இருக்கும் என்று தெரியவில்லை என அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement