• Aug 27 2025

காந்தாரா மாதிரி படம் தயாராகி வருகின்றது..விஜய் ஆண்டனி பேட்டி..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக பலதிறமைகள் கொண்ட விஜய் ஆண்டனி தற்போது தனது அடுத்த பெரிய கனவுப் படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். “கர்நாடகாவில் 'காந்தாரா' எப்படி ஒரு உள்ளூர் கதையை உலகளவில் எடுத்துச்சென்றதோ அதேபோல் ஒரு கிராமத்து கதையை பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக எடுக்கப் போகிறேன்” என்று அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.இந்தப் புதிய படத்தின் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லைஆனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.ஷூட்டிங் பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார்.


இந்த படம் தமிழ் சினிமாவின் அடுத்த முக்கிய முயற்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் இந்த முயற்சி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Advertisement

Advertisement