• Sep 20 2024

தி லெஜன்ட் திரைப்படத்தின் விற்பனை உரிமையைக் கைப்பற்றிய பிரபல படத்தயாரிப்பு நிறுவனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் விற்பனை நிலையத்தின் உரிமையாளராக இருப்பவர் தான் தி லெஜண்ட் சரவணன். இவர் தன்னுடைய விற்பனை நிலையத்தின் விளம்பரத்திற்காக அனைத்து வயதுடைய ஹீரோயின்களுடனும் ஆட்டம் போட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தி லெஜண்ட் என்னும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து மிரட்ட உள்ளார்.இப்படத்தை உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி -ஜெர்ரி இயக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏபி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியன் ரூபாய் 30 கோடிக்கு கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement