நேற்று முன் தினம் நிறுவனம் ஒன்றின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக சரிகமப பிரபலங்களுடன் இணைந்து தொகுப்பாளினி அர்ச்சனாவும் வருகை தந்திருந்தனர். இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் திடீர் புயல் மழை காரணமாக கதிரைகள் திரைகள் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக ரசிகர்கள் சோகத்தில் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு ரசிகர்கள் வெறுப்புடன் மற்றும் வருத்தத்துடன் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அதிகமழை மற்றும் புயல் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
Listen News!