• Sep 20 2024

அஜித் சார் பற்றிக் கேட்டா ’பெரிய பையன்’ன்னுதான் எங்க அம்மா சொல்லுவாங்க- புதிய தகவலைக் கூறிய பிரபல சீரியல் நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பல இருந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த பெண் காமெடி நடிகர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். அந்த வரிசையில் மருதமலை படத்தில் முக்கிய காமெடி சீனான 5 கணவருடன் வாழும் பெண்ணாக இருந்து ஏட்டையா உங்க பெயரையும் சேர்த்து எழுதுங்க என வடிவேலுவுடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ப்ரியங்கா.

இந்தக் காமெடி சீனினால் ரசிகர்களால் அறியப்பட்ட இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்து ஷு தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டாள்' என்னும் தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது என் அக்கா கணவர் மூலமா எதார்த்தமா ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சது. அதுல ஸ்டில் சாரதி சாரை நேர்காணல் பண்ணினேன். அப்படித்தான் மீடியா எனக்கு அறிமுகமாச்சு. ஆங்கரிங்கைப் பார்த்துட்டு 'காதல் தேசம்' படத்துக்குக் கூப்பிட்டாங்க. அதுதான் என் முதல் படம். அந்தப் படம் எடுக்கும்போது முதல் ஷாட்டே ரொம்ப நேரம் எடுத்துச்சு. கறுப்பு மேக்கப் போட்டு கறுப்பா இருந்தேன். அந்தப் படத்தையே ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் பார்த்தேன்”என்றும் கூறினார்.

மேலும் சினிமாவில் ரீ-என்ட்ரி குறித்துக் கேட்ட போது
கோவிட் லாக்டவுன் காரணமா எல்லாமே முடங்கியிருந்துச்சு. இப்பதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. என்னதான் சினிமாவில் காமெடியா நடிச்சாலும் சின்னத்திரையில் நான் வில்லி தெரியுமா!” "பொதுவா சீரியலில் வில்லியா நடிக்கிறவங்களை நேரில் பார்க்கும்போது ஆடியன்ஸ் திட்டுவாங்கன்னுதான கேள்விப்பட்டிருக்கீங்க. ஆனா, என்னை யாரும் திட்ட மாட்டாங்க. அவங்களுக்குப் பிடிச்ச காமெடியைச் சொல்லிப் பாராட்டுவாங்க.

வடிவேலு சார் யாருன்னு தெரியாத வயசிலேயே அவருடன் நடிச்சிட்டேன். விபத்தா அமைஞ்சதுதான் அந்த வாய்ப்புகள் எல்லாமே! அவரும் கிட்டத்தட்ட பத்து வருஷமா பெருசா நடிக்கலைன்னு கேள்விப்பட்டேன். நான் கல்யாணத்துக்குப் பிறகு மீடியாவிலிருந்து விலகி இருந்ததால சினிமா எதுவும் தெரியாது. இப்பதான் அவர் இத்தனை வருஷம் நடிக்காம மறுபடி நடிக்க வந்திருக்கார்னு தெரிஞ்சுகிட்டேன். வெளியில் பார்க்கிறவங்க எல்லாரும் எப்ப நடிப்பீங்கன்னு கேட்பாங்க. இதைச் சொல்லலாமா, கூடாதான்னுகூட எனக்குத் தெரியல. என் பர்சனல் வாழ்க்கை விவாகரத்தை நோக்கிப் போயிட்டிருக்கு” என்றும் கூறினார்.

மேலும் ”அஜித் சாருடன் 'வில்லன்' படத்தில் நடிச்சது நல்ல அனுபவமா இருந்துச்சு. அஜித் சாரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்க்கும்போதும் சரி, அவருடன் படங்களில் நடிக்கும்போதும் சரி, ஒரு அண்ணன் உணர்வு இருந்துட்டே இருக்கும். எங்க குடும்பத்தில் ஒருத்தராகத்தான் அவரைப் பார்த்துட்டு இருக்கோம்… இப்பவும் அம்மாகிட்ட அஜித் சார் பற்றிக் கேட்டா ’பெரிய பையன்’ன்னுதான் சொல்லுவாங்க” என்றும் கூறினார்.

அத்தோடு அம்மாவுக்கு கேன்சர் வந்துடுச்சு. 10, 15 நாளில் ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க. அதைக் கேட்டதிலிருந்து நான் தூங்கவே இல்லைன்னு அம்மா சொன்னாங்க. எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை. எல்லாமே மறந்துடுச்சு. உன்னைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு அம்மா அழுதிருக்காங்க. அதுக்கும் நான் ரியாக்ட் பண்ணாமலே இருந்திருக்கேன். தூக்க மாத்திரை கொடுத்துத் தூங்க வச்சு ட்ரீட்மென்ட் பண்ணினதுக்குப் பிறகுதான் சரியாகியிருக்கேன். இப்பகூட அந்த மருத்துவமனைச் சூழலை நினைச்சா மனசு பாரமாகிடும். இப்ப அம்மா குணமாகிட்டாங்க. நல்லா இருக்காங்க!" என பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement