• May 20 2024

கோப்ரா இசை வெளியீட்டு விழாவுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த விக்ரம்- கூச்சலிட்டு கத்திய ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் வேறுபட்ட கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடித்து வரும் முக்கிய நடிகர் தான் விக்ரம். இவர் நடிப்பில் பொன்னியயின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்னும் ரோலில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முதல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.

பிறகு அவருக்கு மாரடைப்பு கிடையாது என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்தார்.விக்ரமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.இதயத்தில் லேசான அசவுகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் உள்ளார் என்றும் கூறப்பட்டது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் விக்ரம்,பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. இப்போது நலமடைந்து வீடு திரும்பிய விக்ரம்சென்னை Phoenix Market City யில் நடக்கும் கோப்ரா ஆடியோ விழாவில் விக்ரம் நிச்சயம் கலந்து கொள்வார் என படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து படத்தின் மொத்த பாடல்கள் லிஸ்டையும் வெளியிட்ட செவன் ஸ்கிரன் ஸ்டுடியோ, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் இந்த விழா நடக்கும் என அறிவித்தது.
கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இசை நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் விக்ரமை காணோம் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் விக்ரம்.

அரங்கம் அதிரும் ரசிகர்களின் கூச்சலுடன் ஸ்டையிலாக கையசைத்த படி வந்தார் விக்ரம். ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வந்த விக்ரம் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட்டு கத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  •  சமூக ஊடகங்களில்

Advertisement

Advertisement