• Apr 26 2024

வெளிச்சத்துக்கு வந்த வெண்பாவின் நாடகம்- பளார் என்று அறைந்த பாரதி- கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்ன

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய தினம் வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க காரணம் என்ன என எல்லோரும் கேட்க சௌந்தர்யா பாரதியை பிடித்து பளாரென அறைந்து பதில் சொல்லு என கேட்க வெண்பா கர்ப்பமாக இருக்கிறாள் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு வெண்பா கர்ப்பத்துக்கு நீ தான் காரணமா சொல்லு என சௌந்தர்யா அவரை உலுக்கி கேட்க நான் இல்ல என சொல்ல அப்போ எதுக்கு வெண்பா கழுத்தில் தாலி கட்ட முடிவு பண்ண என கேட்க வெண்பா போன மாசம் ஏதோ ஒரு பார்ட்டிக்கு போயிருக்க அப்போ அவளை யாரோ ஒருத்தர் ஜூஸ்ல மயக்கம் மருந்து கலந்து கொடுத்து கெடுத்துட்டாங்க, அவளுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என தெரியாததால் அந்த குழந்தையை கலைக்க மனமில்லாமல் குழந்தைக்கு ஒரு சமூக அந்தஸ்து வேண்டும் என என்னை தாலிக்கட்ட சொன்னாள்.


முதலில் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. நீ தாலி கட்டவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என தற்கொலை முயற்சி செய்ய அவளை நான் தான் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினேன். திரும்பவும் என்னை பிளாக் மெயில் செய்ய வேறு வழியில்லாமல் தான் தாலி கட்ட முடிவு செய்தேன் என சொல்ல கண்ணம்மா நீ பெத்த குழந்தைகளுக்கு உன்னால அப்பாவாக இருக்க முடியல நீ எவனோ பெத்த குழந்தைக்கு அப்பாவாக போறியா என கேள்வி கேட்க பாரதி தலை குனிந்து நிற்கிறார்.

ஷர்மிளா உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என கேட்க ரோஹித் நான் தான் என நடந்த விஷயங்களை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ‌ பாரதி இதனால் அதிர்ச்சியாகி என்ன பார்த்தா எப்படி தெரியுது ரோகித் சொல்றது உண்மையா என கேட்க வெண்பா சாரி பாரதி என சொல்ல பலார் என அறைகிறார். நான் உன்னை நல்ல பிஃரண்டா தான் பார்த்தேன் ஆனா நீ என்னை எப்படி எல்லாம் யூஸ் பண்ணி இருக்க என கோபப்படுகிறார்.

உடனே சௌந்தர்யா எல்லா பழியையும் தூக்கி அவ மேல போடாத அவ யாருகிட்டையோ குழந்தை வாங்கிட்டு வந்து இருக்கானு கூட இருக்கட்டும், அவ தாலி கட்ட சொன்னா நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே எனக்கு இன்னும் விவாகரத்து ஆகல இப்போ உன் கழுத்துல தாலி கட்டினால் ரெண்டு பேரும் ஜெயிலுக்கு தான் போகணும்னு சொல்ல வேண்டியது தானே என கேள்வி கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் தலைகுனிகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement