• May 20 2024

லாக்டவுன்ல கமல் இதைத்தான் செய்தாராம்...ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

எனினும் தற்போது விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் தனது லாக்டவுன் நாட்கள் பற்றி பேசியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.

இதன் காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கியது. எனவே அனைவரும் வீட்டிலேயே தங்களது காலத்தை கழித்தனர். இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் லாக்டவுன் நாட்களில் ஒரு நாளில் நான்கு படங்கள் பார்ப்பாராம் என கூறியுள்ளார்.

அப்போது கிடைத்த ஓய்வு நேரங்களை பயன்படுத்தி மூன்று கதைகளை எழுதியுள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார். எனவே இதனை கேட்ட ரசிகர்கள் வருங்காலத்தில் கமல் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகுமென்று எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement