• May 10 2024

கீர்த்தி சுரேஷிட்ட இதை கேட்டேன் கடைசி வரை சொல்லி தரவில்லை-செல்வராகவன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என கிளாசிக் படங்களை இயக்கி தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் செல்வராகவன்.

அந்த வகையில் இவர் இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன்.அந்த திரைப்படம் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது நான் கீர்த்தி சுரேஷிட்ட எவ்வளவோ கேட்டேன் எப்படி நீங்கள் இப்படி நடிக்கிறீர்கள் எப்படி இப்படி ஒரு கேரக்டரில் டக்குன்னு மாறுறீங்க என அவங்க கடைசி வரைக்கும் கத்துக்கொடுக்க வில்லை என கூறியுள்ளார்.

அதற்கு நான் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கத்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு என கூறியுள்ளார்.இந்த விடயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.சாணிக்காயிதம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து மக்களிடத்தே அதிகம் வரவேற்ப்பு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement