• Apr 26 2024

முடிவுக்கு வரும் நிகழ்ச்சி.. ஒருவரைக் கூட வைல்டு கார்ட் என்ட்ரியாக அனுப்பி வைக்காத பிக்பாஸ்... காரணம் இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் அசீம், மைனா, விக்ரமன், ஷிவின், கதிரவன், அமுதவாணன் ஆகிய 6 பேர் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் நேற்று நடந்த பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.


இதனால் தற்போது 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் எஞ்சி உள்ளனர். இதில் அசீம் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் ஒருவர் தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அவர்கள் இருவரில் யார் அந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.


பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் ஒருவராவது கட்டாயம் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி முதல் சீசனில் ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, சுஜா வருணி, காஜல் பசுபதி ஆகியோரும், இரண்டாவது சீசனில் விஜயலட்சுமி, மூன்றாவது சீசனில் கஸ்தூரி, நான்காவது சீசனில் சுசித்ரா, ஐந்தாவது சீசனில் அமீர், சஞ்சீவ் ஆகியோரும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசனானது தற்போது 100 நாட்களைக் கடந்த விட்ட நிலையிலும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் கூட அனுப்பப்படவில்லை. இதற்கு காரணம் என்ன எனப் பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர். 


இந்நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அதிகளவிலான போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு விட்டனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 முதல் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்படும். ஆனால் இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே அதிக அளவிலான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டதன் காரணமாகத் தான் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக யாரும் உள்ளே அனுப்பப்படவில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement