தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநாக வலம் வருபவர் தான் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
மேலும் இவர் இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இது தவிர தனது தம்பியும் நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் என்னும் திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் செல்வராகவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியபோது ’எனக்கு சிறுவயது முதலே முக ஸ்டாலின் மிகவும் பிடிக்கும் என்றும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் என்றால் அது முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் என்றும் நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- அப்பா தான் மகன் வடிவில் வந்திருக்கார்- சிவகார்த்தியேகனுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்
- புதிய அப்டேட்டடை வெளியிட்ட தளபதி 66 படக்குழு- ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
- காப்பி சர்ச்சையில் சிக்கிய ரஜனியின் ஜெயிலர் பட போஸ்டர்..!
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!