• Sep 21 2024

படப்பிடிப்பிற்கு சென்றபோது இரண்டு நடிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி-சோகத்தில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

படப்பிடிப்பிற்காக வேனில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக இரண்டு நடிகர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்காக 'தி ஜோசன் ஒன்ஸ்' என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது. மேலும் இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ ஆகியோர் மெக்சிகன் நாட்டிற்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தார்கள்.

எனினும் அப்போது திடீரென வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நடிகர் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ ஆகியோர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விபத்தில் மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement