• May 21 2024

'நான் படத்துக்காக முடி வளர்க்கிறேன் நீ எதுக்காக வளர்க்கிற'-சூர்யாவிடம் சந்தேகக் கேள்வி கேட்ட கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருவதோடு விருதுகளையும் குவித்து வருகிறது .

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் எதிர்த்துப் போராடும் வக்கீல் சந்துரு வாக படத்தில் நடித்து கலக்கி இருந்தார் சூர்யா. இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.

மேலும் ஜெய் பீம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படத்தில் லிஜோமொல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் லாக் டவுனில் நடிகர் சூர்யா முடி வளர்ப்பதை பார்த்துவிட்டு கார்த்தி நான் தான் பொன்னியின் செல்வன் படத்திற்காக நீண்ட முடி வளர்த்துக் கொண்டு உள்ளேன். நீ எதுக்கு முடி வளர்க்கிற என சூர்யாவை சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு முடி அதிகமாக வைத்து ரொம்ப நாளாச்சு அதனால சும்மா வச்சி பாக்குறேன் என கூறியுள்ளார்.

அதன் பிறகு சூர்யாவின் இந்த நீண்ட முடி கெட்டப்பை பார்த்து விட்டு இயக்குநர் ஞானவேல் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்திற்கு பக்காவாக உள்ளது என சூர்யாவை ஜெய்பீம் படத்தில் ஒப்பந்தம் செய்ததாக நடிகர் சூர்யா தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் இந்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement