• Sep 20 2024

புர்கா அணிந்துகொண்டு ரகசியமாக தியேட்டரில் படம் பார்த்த முன்னணி ஹீரோ-இது என்ன கொடுமை சேர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக நடிகர்கள் வெளியில் வந்தாலே அவர்களை பார்க்க கூட்டம்  கூட்டமாக வந்துவிடுவார்கள். அதனாலேயே அவர்கள் வெளியில் வர யோசிப்பார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் புர்கா அணிந்துகொண்டு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து இருக்கிறார். இந்த வியடம் தற்போது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

அந்த நடிகர் வேற யாரும் இல்லை.விஜய் தேவரகொண்டா தான் அது.2019ல் அவர் தனது தெலுங்கு படமான டியர் காம்ரேட் படத்தின் ரெஸ்பான்ஸை பார்க்க அப்படி செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

தியேட்டரில் புர்கா அணிந்து உயரமாக ஒருவரை நீங்கள் பார்த்தால் அது நானாக இருக்கலாம் என விஜய் தேவரகொண்டா காமெடியாக கூறி இருக்கிறார்.



நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அத்தோடு அந்த படத்தில் பாலிவுட் நடிகை நடிகை அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  வரும் ஆகஸ்ட் 25ம் தேதி படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement