தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய breaking news தற்போது வெளிவந்துள்ளது. ஜெயிலர் 2 படத்தை சமீபத்தில் முடித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிப்பதால்,ரசிகர்களுக்கு இரட்டை உற்சாகம் ஏற்பட்டு இருந்தது. தற்போது, படத்தின் இயக்குநர் யார்? என்பது முக்கிய கேள்வியாக இருந்த நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘தலைவர் 173’ படத்தை முதலில் சுந்தர்.சி இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுந்தர்.சி இயக்குநராக தேர்வு செய்யப்பட்டதால், ரசிகர்கள் அவருடைய தனித்துவமான திரைக்கதை மற்றும் காட்சித்திறன் மூலம் படம் பெரிய commercial & critical success ஆக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், சில காரணங்களால் சுந்தர்.சி படத்தை இயக்குவதை விட்டு வெளியேறினார். சுந்தர்.சி வெளியேறிய பிறகு, தயாரிப்பு குழு புதிய இயக்குநரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியான தகவலின்படி, ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபி சக்கரவர்த்தி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய இயக்குநராக அறியப்படுகிறார். ‘டான்’ படம், திரைக்கதை மற்றும் காட்சி இயக்கத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதால், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அவருக்கு மேம்பட்ட பெயர் கிடைத்தது.
இதனால், ரஜினிகாந்த்–கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 173’ படத்திற்கு, சிபி சக்கரவர்த்தி இயக்குநராக வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Every HERO has a FAMILY#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/IkVVMgi3q8
Listen News!