• May 21 2024

தப்பைத் தட்டிக் கேட்க தயாரான ஆண்டவர்... யார் மாட்டிக்கப் போறாங்க... வெளியானது முதல் ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சண்டைக்கு என்றைக்குமே பஞ்சம் இருப்பதில்லை.


அதாவது நேற்றைய தினம் அசீம் ஆயிஷாவை பார்த்து வாடி, போடி எனத் திட்டியமையால் பதிலுக்கு ஆயிஷாவும் கத்தத் தொடங்கினார். இறுதியில் ஆயிஷா ஷூவை கழட்டி அடிப்பதற்கும் தயாராகி விட்டார். அதேபோன்று விக்ரமனுக்கும், அசீமுக்கும் இடையிலும் சில வாய்க்கலப்புக்கள் இடம்பெற்றிருந்தன.


அதுமட்டுமல்லாது அசல் கோளாரின் அலப்பறைகளும் தாங்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது குயின்ஷி, மஹேஸ்வரி, ஜனனி, நிவாஷினி என இவரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.


இந்நிலையில் தற்போது இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் நம்ம ஆண்டவர் பேசுகையில் "தப்புப் பண்ணுறவங்களுக்கு தான் செய்றது தப்பு என்று தெரியாமலே போவது எப்போது தெரியுமா..? நீ செய்றது தப்பு என்று சொல்றதுக்கு ஆளே இல்லை இல்லாமல் போகும் போது தான்" எனக் கூறியிருக்கின்றார். 

மேலும் "தப்பை தட்டிக் கேட்கிறது தானே நம்ம வேலை, அதுக்குத் தானே நாம இருக்கோம்" எனவும் கூறியிருக்கின்றார். இவர் இவ்வாறு கூறியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை தூண்டி இருக்கின்றது. 

அதாவது நம்ம ஆண்டவர் யார் பண்ணியது தப்பு என்று கூறியிருக்கின்றார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement