• May 10 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜிபி முத்து... வெளியான அதிர்ச்சி வீடியோ... கவலையில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆட்டம் பாட்டம், சண்டை, அழுகை, கோபம், சிரிப்பு என ரசிகர்களின் உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் மாறி மாறி வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. 


இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்றைய தினம் முதல் போட்டியாளராக யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், யாரும் எதிர்ப்பாராத நிலையில் ஜிபி முத்து வெளியேறி இருக்கின்றார். 


அதாவது இவர் தான் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் பட்டத்தை வெல்வார் என ஜிபி முத்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்த நிலையில், இவர் திடீர் என வெளியேறி உள்ள சம்பவம் பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முழுக்க மிகவும் சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருந்த ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் இருந்து, தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளின் நியாபகம் வந்ததால் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பலமுறை பிக்பாஸ்ஸிடம் அழுதழுது கோரிக்கை வைத்து வந்தார். 


இருப்பினும் பிக்பாஸ் சில முறை  ஜிபி முத்துவை அழைத்து "அவரது பிள்ளைகளிடம் பேசியதாகவும்... அவர்கள் உங்களை 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும்" தெரிவித்து அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஜிபி முத்து கேட்காமையினால் பின்னர் முடிவு உங்கள் கையில் உள்ளது என கூறி அனுப்பினார்.


அவர் கூறிய எதையுமே கேட்காத ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

மறுபடியும் ஜபி முத்துவை அழைத்து பேசிய பிக்பாஸ் "முடிவு உங்களுடையது, அனைத்து போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்று மெயின் டோர் வழியாக வெளியே வாருங்கள்" என கூறினார்.  இது குறித்து கண்ணீருடன் ஜிபி முத்து பிக்பாஸ் இடம் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. 


ஜிபி முத்துவின் இந்த முடிவானது அவரது ரசிகர்களுக்கு பெரியளவில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், குடும்பத்தை காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு வரும் அவரது பாசத்தையும் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement