• Sep 20 2024

பாக்கியாவிற்கு எதிராக திரும்பும் குடும்பம்- வெடிக்கும் அடுத்த பிரச்சினை – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மக்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.விவாகரத்தான் பாக்கியா தனது குடும்பத்துடன் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போகின்றார் என்பதை இன்றைய எபிசோட்டில் பார்ப்போம்....

பாக்கியா செழியினை சாப்பிட்டு போ என சொல்ல வேண்டாம் சாப்பாடு போட்டுட்டு அதுக்கப்புறம் தியாகி மாதிரி சொல்லி காண்பிப்பீங்க. எமோஷனல் பிளாக் மெயில் செய்யுங்க. நீங்களும் வேண்டாம் உங்க சாப்பாடு வேண்டாம் என சொல்ல தாத்தா செழியனை திட்டுகின்றார். இதன் பிறகு இனியா தலை வராமல் கீழே வர பாக்கியா தலை வார போக நீ ஒன்றும் பாச ட்ராமா போட வேண்டாம். எனக்கு உன்ன பார்த்தாலே புடிக்கல நானே என் வேலையை செய்து கொள்கிறேன். என மேலே சென்று விடுகிறார்.


இதனையடுத்து ஈஸ்வரி பாக்கியா நீ ஆபீஸ்ல இருந்தபோது அம்மா அம்மா நீ அழுதுகிட்டு இருந்த குழந்தை மனசுல நீ இப்ப எப்படி பதிவாகி இருக்க பாரு நீ பண்றது ரொம்ப தப்பா இருக்கு என சொல்லி உள்ளே சென்று விடுகிறார்.

ஏன் நீ போய் வேலையை பாருமா, இதை எல்லாம் கண்டுக்காத நான் இனியாவ சமாதானப்படுத்துறேன் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.அடுத்ததாக ரூமுக்குள் கோபிநாத் அப்பா ஈஸ்வரியிடம் நீ சொன்னது தான் நடந்தது. அந்தப் பையன் நேரா இங்க இருந்து அந்த ராதிகா வீட்டுக்கு தான் போயிருந்தான் என சொல்லி ராதிகா வீட்டுக்கு போய் சத்தம் போட்ட விஷயங்களை கூறுகிறார். 


அடுத்ததாக அவர்களை சந்தித்து விட்டு வரும்போது அமிர்தா உங்கள் முகமே சரியில்லை என்னாச்சு என கேட்க அப்பா அம்மா இருவரும் விவாகரத்து வாங்கிய விஷயத்தை அமிர்தாவிடம் கூறுகின்றார்.



இதன் பிறகு ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரி கோபியை எங்க மறைச்சி வச்சிருக்கீங்க என சத்தம் போட ராதிகா கோபி இங்கே இல்லை புரிந்துகோங்க என சொல்ல ஈஸ்வரி கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார். முந்தானையில மறைச்சு வச்சிருக்கியா என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement