• Apr 27 2024

நயன்தாராவை அடிக்க சொன்ன இயக்குநர்... சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகவும் பிரமாண்டமாகும் நடைபெற்றது.


அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு ஒரு திரைப்படத்திற்கு சுமார் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகின்றது.இவர் நடிப்பில் பல படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. அதில் இயக்குநர் ராம்நாத் பலனிகுமார் இயக்கத்தில் ஈ மற்றும் திருநாள் படங்களில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும் இரு படங்களும் ஓரளவிற்கு பேசப்பட்ட நிலையில் அப்படத்தின் இயக்குநர் ராம்நாத் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜீவா முதல் நயன் தாராவின் கோபமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


அதில், நயன் தாராவிடன் 49 நாட்கள் இரவு பகல் கால்ஷீட் கேட்டு கதையை கூறி கும்பகோணத்தில் ஷூட்டிங் ஆரம்பித்தேன். அத்தோடு நானும் ரவுடி தான் படத்தினை முடித்துவிட்டு அடுத்த நாளே கலைப்புடன் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வந்தார்.

முதல் நாள் இரவு ஷூட்டிங்கில் அவருக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு முடியாமல் போனதை சொன்னார். சீக்கிரம் அனுப்பி வைக்க கேட்ட நயன்தாராவை வேண்டும் என்றே 2 மணி வரை ஷூட்டிங்கில் நடிக்க வைத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த நாள் ஷூட்டிங்கில் ஒரே ஷெடியூலில் முடித்துவிட்டேன்.


அது இண்டர்வெல் பிளாக் சீன் என்பதால், ஜீவா, நயன்தாரா மீது கூரை விழுந்து பெற்றோரிடம் மாட்டிக்கொள்ளும் சீக்வெண்ட்ஸ் காட்சி. அப்போது நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்த நடிகை ரமாவிடம் ஸ்கிரிப்ட்டில் இல்லாத ஒன்றினை செய்ய சொன்னேன்.


நயன் தாராவை பட்டென்று அறையச் சொன்னேன் என்பது தான் அது.மேலும் அதை கேட்டு கதைக்கு தேவை பட்டது மேடம் என்று ராம்நாத் தெரிவித்தார். அதெல்லாம் பரவாயில்லை என்று நயன்தாரா ஈடுபாடுடன் இருந்தார் என்று ராம் நாத் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement