• May 19 2024

மஹாவை ஆசீர்வாதம் பண்ண மறுத்த சூர்யா,வேதாச்சலம் தாத்தா வாங்கிய சத்தியம்- ராஜலட்சுமிக்கு தெரிய வருமா?-Aaha Kalyanam

stella / 4 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டில் பொங்கல் பண்டிகை சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மஹா பொங்கல் வைத்து விட்டு சூர்யா காலில் விழுந்து தன்னை ஆசீர்வாதம் பண்ணச் சொல்லி கேட்கின்றார். அதற்கு சூர்யா இவளை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியாது என்கின்றார்.

இதனால் மஹா கவலைப்பட்டு நிற்க பின்னர் சூர்யாவின் தாத்தா நடக்க முடியாமல் மயங்கி விழ எல்லோரும் பதறிப் போய் அவரைக் காப்பாற்றி ரூமுக்குள் விட அவர் சூர்யாவிடம் மஹாவுடன் சேர்ந்து வாழச் சொல்கின்றார். அத்தோடு தன்னுடைய கடைசி ஆசை என்றும் சத்தியம் வாங்குகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement