இந்திய சினிமாவில் முன்னணி நடிகாரக வலம் வருபவர் சோனு சூத். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னட, பஞ்சாப் எனப்பல மொழிகளில் நடித்து வருகின்றார். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவர் தமிழில் "ஒஸ்தி, தேவி, மதகஜராஜா " போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தும் உள்ளார். மேலும் இவருடைய அருந்ததி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில் சோனு சூத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த முடித்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து சில விடயங்களில் கூறியுள்ளார் . அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன . இன்று சாமி தரிசனம் செய்வதற்காக ழுமலையான் கோவிலிற்கு வருகை தந்தேன் இங்கு 25 ஆண்டுகள் கழித்து வந்துள்ளதாக கூறினார். மேலும் எல்லோருடைய அமைதிக்காகவும் வளர்ச்சிக்காவும் பிராத்திப்பதாக கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!